கோவை: கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பெருமளவில் பரவி வருவதைத் தடுக்க, மதம் சார்ந்த வழிபாட்டுத் தலங்களுக்கு தடை விதித்துள்ள நிலையில், ரமலான் சிறப்பு தொழுகைக்கு அனுமதி வழங்கக் கோரி இஸ்லாமிய அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை: கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பெருமளவில் பரவி வருவதைத் தடுக்க, மதம் சார்ந்த வழிபாட்டுத் தலங்களுக்கு தடை விதித்துள்ள நிலையில், ரமலான் சிறப்பு தொழுகைக்கு அனுமதி வழங்கக் கோரி இஸ்லாமிய அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கொரோனா பெரும் தொற்றின் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் பெரிதளவு பரவி வரும் நிலையில் தமிழக அரசு இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் குறிப்பாக மதம் சார்ந்த வழிபாட்டுத் தலங்களுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைக் கணக்கில் கொண்டு இஸ்லாமியர்களின் சிறப்புப் பண்டிகையான ரமலான் மாதத்திற்கான சிறப்பு தொழுகையை மேற்கொள்ள இரவு நேரத்தில் அனுமதி அளிக்குமாறு ஏற்கெனவே கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர்.
இந்தநிலையில், வழிபாடுகளுக்கு தடை என்கிற அறிவிப்பு என்பது இஸ்லாமியர்களைப் பெரும் வருத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது. கடந்த வருடம் கொரோனா கட்டுப்பாடு காரணமாக சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட இயலாமல் போனது. இந்த வருடமும் அதேநிலை ஏற்படுவது பெரும் வருத்தம் அளிப்பதாக சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பாக தெரிவித்தனர்.

மேலும், தமிழக அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றியும் முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளி மற்றும் பள்ளிவாசலுக்கு தொழுகை செய்ய வருபவர்களின் உடல் வெப்பநிலையை கண்காணித்தல் ஆகியவற்றைப் பின்பற்றி இரவு 10 மணிக்கு முன்னரே தொழுகையை முடித்துக் கொள்கின்றனர். எனவே, இஸ்லாமியர்களின் உணர்வை கருத்தில் கொண்டு சிறப்பு தொழுகைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். அரசின் விதிமுறைகளை பின்பற்றி தொழுகைகள் நடைபெறும். ரமலான் சிறப்பு தொழுகைக்கான அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கொரோனா பெரும் தொற்றின் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் பெரிதளவு பரவி வரும் நிலையில் தமிழக அரசு இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் குறிப்பாக மதம் சார்ந்த வழிபாட்டுத் தலங்களுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைக் கணக்கில் கொண்டு இஸ்லாமியர்களின் சிறப்புப் பண்டிகையான ரமலான் மாதத்திற்கான சிறப்பு தொழுகையை மேற்கொள்ள இரவு நேரத்தில் அனுமதி அளிக்குமாறு ஏற்கெனவே கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர்.
இந்தநிலையில், வழிபாடுகளுக்கு தடை என்கிற அறிவிப்பு என்பது இஸ்லாமியர்களைப் பெரும் வருத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது. கடந்த வருடம் கொரோனா கட்டுப்பாடு காரணமாக சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட இயலாமல் போனது. இந்த வருடமும் அதேநிலை ஏற்படுவது பெரும் வருத்தம் அளிப்பதாக சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பாக தெரிவித்தனர்.
மேலும், தமிழக அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றியும் முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளி மற்றும் பள்ளிவாசலுக்கு தொழுகை செய்ய வருபவர்களின் உடல் வெப்பநிலையை கண்காணித்தல் ஆகியவற்றைப் பின்பற்றி இரவு 10 மணிக்கு முன்னரே தொழுகையை முடித்துக் கொள்கின்றனர். எனவே, இஸ்லாமியர்களின் உணர்வை கருத்தில் கொண்டு சிறப்பு தொழுகைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். அரசின் விதிமுறைகளை பின்பற்றி தொழுகைகள் நடைபெறும். ரமலான் சிறப்பு தொழுகைக்கான அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.