கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிப்பு... திருப்பூர் ஆட்சியரிடம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் மனு..!

திருப்பூர்: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தவிர்க்கும் வகையில், அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முடிதிருத்தும் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


திருப்பூர்: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தவிர்க்கும் வகையில், அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முடிதிருத்தும் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரக் கூடிய சூழ்நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை இன்றுமுதல் அமல்படுத்தி உள்ளது. அதனடிப்படையில், அழகு நிலையங்கள் மற்றும் சலூன்கள் அடைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இதனையே நம்பியுள்ள சலூன் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு சலூன் தொழிலாளர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி, வாடகை கட்டடத்தில் இயங்கும் கடைகளுக்கு வாடகையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். கடைக்கான மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.



உரிய வழிமுறைகளைப் பின்பற்றி காலை முதல் மதியம் வரை கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி, ஆதி மருத்துவர் இயக்கம் மற்றும் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியோர் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...