சலூன் கடைகள் திறக்க அனுமதி வேண்டும்... கோவை ஆட்சியரிடம் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் மனு..!

கோவை: சவரத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், சலூன் கடைகளைத் திறக்க சிறப்பு அனுமதி வழங்கக் கோரி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.


கோவை: சவரத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், சலூன் கடைகளைத் திறக்க சிறப்பு அனுமதி வழங்கக் கோரி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

இன்று முதல் தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வர புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சலூன், அழகு நிலையங்கள் செயல்பட தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவால் சவரத் தொழிலாளர்கள் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சென்ற ஆண்டு முழு ஊரடங்கின் போது பல சவரத் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்து தொழிலை விட்டுச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது என்று தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.



இந்த முறையும் சலூன்கள் முற்றிலுமாக மூடப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு தங்கள் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும். கோவை மாநகராட்சியில் 1500-க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் உள்ளதாகவும் அதைச் சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை சலூன் கடைகள் செயல்பட அரசு தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். மேலும் அரசின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் தாங்கள் செயல்படுவோம் என்று உறுதி கூறி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் சார்பாக கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...