ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து ஆக்சிஜன் அனுப்புவதை ரத்து செய்யும்படி பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை : ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து ஆக்சிஜன் அனுப்புவதை ரத்து செய்யும்படி பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடித த்தில் கூறியிருப்பதாவது;
“தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது, ஆனால் தற்போதைய போக்குகளைக் கருத்தில் கொண்டு, விரைவில் 450 மெட்ரிக்டன் ஆக்சிஜன் தேவைப்படும்,
எங்கள் உற்பத்தி திறன் 400 மெட்ரிக் டன் ஆகத்தான் இருக்கிறது. . 2020 ஆம் ஆண்டில் முந்தைய முதல் அலையின்போது அதிகபட்சமாக 58,000 பேர்தான் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் ஒப்பிடும்போது இப்போது பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. தடையற்ற மற்றும் போதுமான ஆக்சிஜன் விநியோகத்தை வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கிடையில், தமிழகத்திற்கு சமீபத்திய தேசிய மருத்துவ ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டில் 220 மெட்ரிக்என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இந்த தவறான ஒதுக்கீட்டின் அடிப்படையில், 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள உற்பத்தி வசதி களிலிருந்து ஆந்திரா மற்றும் தெலங்கானாவுக்கு திருப்பி விடப்பட்டது. ,
இந்த பிரச்சினையில், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்புகளின் (பெசோ) தரவுகளின்படி, தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் நுகர்வு ஏற்கனவே 310 மெட்ரிக் டன்களை எட்டியுள்ளது, இது 220 மெட்ரிக் டன் என மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள போதிய ஒதுக்கீட்டிற்கு எதிராகஉள்ளது.
மேலும், ஒதுக்கீடு செய்யப்பட்ட மாநிலங்களில் எங்களை விட குறைந்த அளவில் தான்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்னிந்தியாவில் இரண்டாவதாக அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளசென்னை நகரத்திற்கு ஆக்ஸிஜன் வழங்கும் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து திசை திருப்பப்படுவது எந்த நியாயமும் இல்லை.
இதை உடனடியாக சரி செய்ய வேண்டும். தமிழகத்தின் தேவைகளிலிருந்து திரவ ஆக்சிஜனை கட்டாயமாக திசை திருப்புவது சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பெரும் நெருக்கடிக்கு வழிவகுக்கும்.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து ஆக்சிஜன் அனுப்பப்படுவதை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடித த்தில் கூறியிருப்பதாவது;
“தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது, ஆனால் தற்போதைய போக்குகளைக் கருத்தில் கொண்டு, விரைவில் 450 மெட்ரிக்டன் ஆக்சிஜன் தேவைப்படும்,
எங்கள் உற்பத்தி திறன் 400 மெட்ரிக் டன் ஆகத்தான் இருக்கிறது. . 2020 ஆம் ஆண்டில் முந்தைய முதல் அலையின்போது அதிகபட்சமாக 58,000 பேர்தான் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் ஒப்பிடும்போது இப்போது பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. தடையற்ற மற்றும் போதுமான ஆக்சிஜன் விநியோகத்தை வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கிடையில், தமிழகத்திற்கு சமீபத்திய தேசிய மருத்துவ ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டில் 220 மெட்ரிக்என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இந்த தவறான ஒதுக்கீட்டின் அடிப்படையில், 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள உற்பத்தி வசதி களிலிருந்து ஆந்திரா மற்றும் தெலங்கானாவுக்கு திருப்பி விடப்பட்டது. ,
இந்த பிரச்சினையில், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்புகளின் (பெசோ) தரவுகளின்படி, தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் நுகர்வு ஏற்கனவே 310 மெட்ரிக் டன்களை எட்டியுள்ளது, இது 220 மெட்ரிக் டன் என மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள போதிய ஒதுக்கீட்டிற்கு எதிராகஉள்ளது.
மேலும், ஒதுக்கீடு செய்யப்பட்ட மாநிலங்களில் எங்களை விட குறைந்த அளவில் தான்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்னிந்தியாவில் இரண்டாவதாக அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளசென்னை நகரத்திற்கு ஆக்ஸிஜன் வழங்கும் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து திசை திருப்பப்படுவது எந்த நியாயமும் இல்லை.
இதை உடனடியாக சரி செய்ய வேண்டும். தமிழகத்தின் தேவைகளிலிருந்து திரவ ஆக்சிஜனை கட்டாயமாக திசை திருப்புவது சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பெரும் நெருக்கடிக்கு வழிவகுக்கும்.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து ஆக்சிஜன் அனுப்பப்படுவதை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.