16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை...பொள்ளாச்சி இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது..!

பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமியை இரண்டாவது திருமணம் செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக, சம்பந்தப்பட்ட இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது உறவினர்கள் ஆறு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமியை இரண்டாவது திருமணம் செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக, சம்பந்தப்பட்ட இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது உறவினர்கள் ஆறு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்

பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்(34), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் சந்திரசேகருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோரிடம் பேசி, சிறுமியை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பாக குழந்தைகள் நலவாரிய அலுவலர் ராணி, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து, சந்திரசேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் சந்திரசேகரை கைது செய்து கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குழந்தைத் திருமணத்துக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் உள்ளிட்ட உறவினர்கள் 6 பேர் மீது குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...