பொள்ளாச்சி: தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக இன்று பொள்ளாச்சியில் வெறிச்சோடிய சாலைகள் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சி: தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக இன்று பொள்ளாச்சியில் வெறிச்சோடிய சாலைகள் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொள்ளாச்சி பகுதியைப் பொறுத்தவரையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளான கோவை சாலை, உடுமலை சாலை, மத்தியப் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கியச் சாலைகள் அனைத்தும் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

போலீஸார் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளான கோபாலபுரம், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் 27 இடங்களில் தற்காலிகமாக சோதனைச் சாவடிகள் அமைத்து வாகன நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். தேவையில்லாமல். வாகனங்களில் வருபவர்களை நிறுத்தி எச்சரிக்கை விடுத்து அனுப்பி வருகின்றனர். அத்தியாவசியமான மருந்துக் கடைகளைத் தவிர, மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு உள்ளன. வருவாய்த் துறை சுகாதாரத் துறை அதிகாரிகளும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொள்ளாச்சி பகுதியைப் பொறுத்தவரையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளான கோவை சாலை, உடுமலை சாலை, மத்தியப் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கியச் சாலைகள் அனைத்தும் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
போலீஸார் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளான கோபாலபுரம், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் 27 இடங்களில் தற்காலிகமாக சோதனைச் சாவடிகள் அமைத்து வாகன நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். தேவையில்லாமல். வாகனங்களில் வருபவர்களை நிறுத்தி எச்சரிக்கை விடுத்து அனுப்பி வருகின்றனர். அத்தியாவசியமான மருந்துக் கடைகளைத் தவிர, மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு உள்ளன. வருவாய்த் துறை சுகாதாரத் துறை அதிகாரிகளும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.