திருப்பூர்: திருப்பூரில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் தற்காலிகச் சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் தற்காலிகச் சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரக்கூடிய சூழ்நிலையில், தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனடிப்படையில் இன்று தமிழகமெங்கும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதை அடுத்து திருப்பூரில் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பின்னலாடை நிறுவனங்கள் அனைத்தும் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன.

மேலும், சாலைகளில் அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியே செல்வதைக் கண்காணிக்கும் வகையில், காவல் துறையினர் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியே வருபவர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர். ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் இன்றி யாரும் வெளியே வரவேண்டாம் என காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரக்கூடிய சூழ்நிலையில், தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனடிப்படையில் இன்று தமிழகமெங்கும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதை அடுத்து திருப்பூரில் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பின்னலாடை நிறுவனங்கள் அனைத்தும் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன.
மேலும், சாலைகளில் அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியே செல்வதைக் கண்காணிக்கும் வகையில், காவல் துறையினர் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியே வருபவர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர். ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் இன்றி யாரும் வெளியே வரவேண்டாம் என காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.