பொள்ளாச்சி அருகே அங்கலகுறிச்சி கோபால்சாமி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சி கோபால்சாமி மலைக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.


பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சி கோபால்சாமி மலைக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி அருகே உள்ள கோபால்சாமி மலைக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக சென்று வருவது வழக்கம்.

கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆன்மீக தலங்களுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.



இதையடுத்து அங்கலக்குறிச்சி அருகே உள்ள கோபால்சாமி மலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோயில் நுழைவாயிலில் வனத்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோயில் சார்பாகவும் வனத்துறை சார்பாகவும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த அறிவிப்புக்கு பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...