அரசு பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன் லைன் மூலம் பயிற்சி.. கோவை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன் லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன் லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கம்பைன்டு என்ஜினீயரிங் சப் ஆர்டினேட் சர்வீஸ் பணி காலியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான தேர்வு வருகிற 6-6-2021ஆம் தேதி அன்று நடக்கிறது. இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் அடுத்த மாதம் (மே) முதல் இணையதளம் வழியாக இலவச பயிற்சி வகுப்பு அளிக்கப்பட உள்ளது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதுடன், குழு விவாதம், பாட வாரியாக வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். எனவே, விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இலவச பயிற்சி வகுப்பு குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கலாம்.'' என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...