கோவை: கோவை: வால்பாறையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை: வால்பாறையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில வாரங்களாக நோய்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் துரித தடுப்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பதும் வால்பாறை வரும் பயணிகளை சுகாதாரத்துறை, வனத்துறை,காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மளுக்கப்பாறை மற்றும் ஆழியாறு சோதனைச்சாவடிகளில் முறையாக சோதனை செய்து அவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்கி கொரோனா பற்றிய விழிப்புணர்வையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றுவரை வால்பாறைப்பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக இருந்த நிலையில் இன்று வால்பாறையிலுள்ள துளசிங்க நகரில் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இதுபோன்ற தொடர் நிலை நீடிக்காமல் இருக்க சுகாதாரத்துறையினரின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் முறையாக கடைபிடித்து தொற்று பரவலைத் தடுக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில வாரங்களாக நோய்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் துரித தடுப்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பதும் வால்பாறை வரும் பயணிகளை சுகாதாரத்துறை, வனத்துறை,காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மளுக்கப்பாறை மற்றும் ஆழியாறு சோதனைச்சாவடிகளில் முறையாக சோதனை செய்து அவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்கி கொரோனா பற்றிய விழிப்புணர்வையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றுவரை வால்பாறைப்பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக இருந்த நிலையில் இன்று வால்பாறையிலுள்ள துளசிங்க நகரில் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இதுபோன்ற தொடர் நிலை நீடிக்காமல் இருக்க சுகாதாரத்துறையினரின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் முறையாக கடைபிடித்து தொற்று பரவலைத் தடுக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.