காவல்துறை மற்றும் கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் டாக்சி ஓட்டுனர்களுக்கு விபத்து முதலுதவி பயிற்சி


கோவை மாநகரில் வாகன விபத்துக்களை தடுக்கவும், விபத்தில் பலியாவோர் எண்ணிகையை தடுக்கவும் போலீசார்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.அதன்படி, இன்று பீளமேட்டில் உள்ள தனியார் விடுதியில் தனியார் கால் டாக்சி ஓட்டுனர்களுக்கு விபத்தில் சிக்கியோருக்கு முதலுதவி அளிக்கும் பயிற்சி நடைபெற்றது. 





கோவை மாநகர காவல்துறையினர் மற்றும் கே.எம்.சி.எச் மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துணை ஆணையர், சரவணன்,  வாகனம் ஓட்டும்போதும், விபத்து நடக்கும்போதும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை ஓட்டுனர்களுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து கே.எம்.சி.எச். மருத்துவமனையின் மருத்துவ குழுவினர், மனித உருவ மாதிரிகளை கொண்டு முதலுதவி மேற்கொள்ளும்  வழிமுறைகளை எடுத்துரைத்தனர். 



இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து அதிகாரி (கிழக்கு) அய்யாசாமி, உதவி கமிஷனர் மற்றும் 100க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுனர்கள் கலந்துகொண்டனர். இந்த பயிற்சி தங்களுக்கு உதவிகரமாக இருந்ததாகவும், இதன் மூலம் விபத்து ஏற்படும் போது உயிர்களை காப்பாற்றுவோம் என்றும் ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.



Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...