திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் நாளை முழு ஊரடங்கு என்பதால் இன்று காய்கறி கமிசன் மண்டிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் நாளை முழு ஊரடங்கு என்பதால் இன்று காய்கறி கமிசன் மண்டிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

உடுமலைப்பேட்டை ராஜேந்திரா ரோட்டில் தினசரி மற்றும் காய்கறி கமிஷன் மண்டி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறி கமிஷன் மண்டி செயல்பட்டு வருகிறது.
விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் காய்கறிகளை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலமான கேரளா மாநிலத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர். பொதுவாக இங்கே நாளொன்றுக்கு பல டன் காய்கறி வர்த்தகம் நடைபெறும்.

இந்நிலையில், நாளை முழு ஊரடங்கு என்பதால் காலை முதல் இரவு வரை பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் இன்று காய்கறிகள் கொள்முதல் செய்தால் நாளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு இன்று காய்கறி கொள்முதலை வியாபாரிகள் நிறுத்தியுள்ளனர்.
இதனால் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை ஊரடங்கு என்பதால் நாளையும் காய்கறி வாங்க முடியாத நிலைதான் ஏற்பட்டுள்ளது. எனவே நாளையும் கமிஷன் மண்டிகளுக்கு விடுமுறை விட்டுள்ளனர்.
உடுமலைப்பேட்டை ராஜேந்திரா ரோட்டில் தினசரி மற்றும் காய்கறி கமிஷன் மண்டி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறி கமிஷன் மண்டி செயல்பட்டு வருகிறது.
விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் காய்கறிகளை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலமான கேரளா மாநிலத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர். பொதுவாக இங்கே நாளொன்றுக்கு பல டன் காய்கறி வர்த்தகம் நடைபெறும்.
இந்நிலையில், நாளை முழு ஊரடங்கு என்பதால் காலை முதல் இரவு வரை பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் இன்று காய்கறிகள் கொள்முதல் செய்தால் நாளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு இன்று காய்கறி கொள்முதலை வியாபாரிகள் நிறுத்தியுள்ளனர்.
இதனால் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை ஊரடங்கு என்பதால் நாளையும் காய்கறி வாங்க முடியாத நிலைதான் ஏற்பட்டுள்ளது. எனவே நாளையும் கமிஷன் மண்டிகளுக்கு விடுமுறை விட்டுள்ளனர்.