பொள்ளாச்சியில் திமுக சார்பில் கொரோனா மருத்துவ பெட்டகம் வழங்கல்!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் திமுக சார்பில், கொரோனா தொற்று பாதுகாப்பு மருத்துவ பெட்டகங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் திமுக சார்பில், கொரோனா தொற்று பாதுகாப்பு மருத்துவ பெட்டகங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் கட்ட அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் மருத்துவ பெட்டகங்கள் வழங்க வேண்டும் என்றும், திமுக நிர்வாகிகளுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.



இதனடிப்படையில், பொள்ளாச்சியில் திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் நாகராஜன் ஏற்பாட்டில் 5000 குடும்பங்களுக்கு மருத்துவப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள ஜலத்தூர் கிராமத்தில் திமுகவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பெட்டகங்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில், கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜன் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கோவை தெற்கு மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தேவையான மருத்துவ பெட்டகங்கள் விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திமுகவினர் தெரிவித்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...