கோவை: கோவையில் மின்சாரம் தாக்கி மற்றும் தடுப்புச்சுவரில் மோதி இருவேறு சம்பவங்களில் 2 தொழிலாளிகள் பரிதாப உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் மின்சாரம் தாக்கி மற்றும் தடுப்புச்சுவரில் மோதி இருவேறு சம்பவங்களில் 2 தொழிலாளிகள் பரிதாப உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (50) கூலித்தொழிலாளி. இவர் நேற்று மதுக்கரையில் தார்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக சென்ற மின்சார வயரை எதிர்பாராதவிதமாக தொட்டார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய அவரை சக தொழிலாளர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, கோவை துடியலூர் அருகே உள்ள கதிர் நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் (59). இவர் அந்த பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை இவர் தனது மொபட்டில் கோவை மேட்டுப்பாளையம் ஊட்டி சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக ரோட்டின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாமிநாதன் இன்று பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (50) கூலித்தொழிலாளி. இவர் நேற்று மதுக்கரையில் தார்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக சென்ற மின்சார வயரை எதிர்பாராதவிதமாக தொட்டார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய அவரை சக தொழிலாளர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, கோவை துடியலூர் அருகே உள்ள கதிர் நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் (59). இவர் அந்த பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை இவர் தனது மொபட்டில் கோவை மேட்டுப்பாளையம் ஊட்டி சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக ரோட்டின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாமிநாதன் இன்று பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.