கோவையில் கொரோனா சமூக பரவல் குறித்து ஆராய ரத்த மாதிரிகள் சேகரிப்பு!

கோவை: கோவையில் கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறிவதற்கான ரத்த மாதிரிகள் சேகரிப்பு நிறைவடைந்துள்ளது.


கோவை: கோவையில் கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறிவதற்கான ரத்த மாதிரிகள் சேகரிப்பு நிறைவடைந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதைக் கண்டறிய சுகாதாரத் துறை சாா்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட பகுதிகளில் மக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின்படி கோவை பொது மக்களிடையே 22 சதவீதம் மட்டுமே நோய் எதிர்ப்பாற்றல் உருவாகி இருந்தது தெரியவந்தது. தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்றின் 2 வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் பொது சுகாதாரத் துறை சாா்பில் மாநிலம் முழுவதும் 2 ஆம் கட்ட ஆய்வு கடந்த வாரம் தொடங்கப்பட்டது.

அதன்படி கோவை மாநகராட்சியில் கே.கே.புதூா், பீளமேடு, காந்திபுரம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் ஆகிய 5 இடங்களில், ஊரகப் பகுதிகளில் ஆனைமலை, அன்னூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், சூலூர், மதுக்கரை, மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய வட்டாரங்களில் 37 இடங்களில் ஆய்வுகள் நடைபெற்றன. மொத்தம் 42 இடங்களில் தலா 30 போ் வீதம் மொத்தம் 1,260 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் முடிவடைந்தன.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ”கோவை மாவட்டத்தில் எடுக்கப்பட்ட 1,260 ரத்த மாதிரிகள் மட்டுமின்றி, திருப்பூர் – 810, நீலகிரி – 240, நாமக்கல் – 600, ஈரோடு – 780 மாதிரிகள் ஆய்வுக்கு கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை கோவை சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலக ஆய்வகத்தில் உள்ள நவீன கிளியா கருவியின் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன் முடிவுகளைப் பொறுத்தே சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பது தெரியவரும்,” என்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...