பொள்ளாச்சியில் உறவினருடன் கள்ளத் தொடர்பு... மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவன்..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உறவினருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டதாகக் கூறி மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவன் போலீசில் சரணடைந்தார்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உறவினருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டதாகக் கூறி மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவன் போலீசில் சரணடைந்தார்.

பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணராஜா(36), விவசாயி. இவரது மனைவி சரண்யா(26). இருவருக்கும் திருமணமாகி ஆறு ஆண்டுகள் முடிந்த நிலையில், 5 வயது மகன் உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக லட்சுமண ராஜாவின் மனைவிக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகக் கூறி, கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், இன்று அதிகாலையில் இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறின்போது, ஆத்திரமடைந்த லட்சுமண ராஜா அரிவாளால் சரண்யாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். பின்னர், கோட்டூர் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளார்.



தகவலறிந்த கோட்டூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, தடயங்களை சேகரித்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லட்சுமண ராஜா மீது கொலை வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...