கோவை வால்பாறை: வால்பாறையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஆழியார் சோதனைச்சாவடியில் வால்பாறைக்கு வரும் அனைத்து போக்குவரத்து வாகனங்களும் சோதனை செய்த பின்னரே வால்பாறைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
கோவை வால்பாறை: வால்பாறையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஆழியார் சோதனைச்சாவடியில் வால்பாறைக்கு வரும் அனைத்து போக்குவரத்து வாகனங்களும் சோதனை செய்த பின்னரே வால்பாறைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்தநிலையில், கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று வரை 27 நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையிலும் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், பொதுமக்கள் சுற்றுலாத்தலங்கள் செல்ல தடை விதித்த நிலையில், வால்பாறை ஆழியார் சோதனைச் சாவடியில் டிஎஸ்பி விவேகானந்தன் உத்தரவுக்கிணங்க வால்பாறை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் சோதனைச் சாவடிகளில் காவல் துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஆழியார் சோதனைச் சாவடியில் காவல்துறையினர், வனத்துறையினர், சுகாதாரத் துறையினர் இணைந்து வால்பாறைக்கு வரும் வாகனங்களைப் பரிசோதனை செய்து வாகனங்களில் வருவோரின் உடல் வெப்பநிலையை அறிந்து முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வால்பாறைக்குள் அனுமதிக்கின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து பேருந்து மூலம் வருபவர்களை கண்காணித்தும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதித்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்தநிலையில், கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று வரை 27 நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையிலும் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், பொதுமக்கள் சுற்றுலாத்தலங்கள் செல்ல தடை விதித்த நிலையில், வால்பாறை ஆழியார் சோதனைச் சாவடியில் டிஎஸ்பி விவேகானந்தன் உத்தரவுக்கிணங்க வால்பாறை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் சோதனைச் சாவடிகளில் காவல் துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஆழியார் சோதனைச் சாவடியில் காவல்துறையினர், வனத்துறையினர், சுகாதாரத் துறையினர் இணைந்து வால்பாறைக்கு வரும் வாகனங்களைப் பரிசோதனை செய்து வாகனங்களில் வருவோரின் உடல் வெப்பநிலையை அறிந்து முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வால்பாறைக்குள் அனுமதிக்கின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து பேருந்து மூலம் வருபவர்களை கண்காணித்தும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதித்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.