வால்பாறை ஆதிவாசி பெண்ணிற்கு இரட்டை பெண் குழந்தைகள் - தாயும் சேயும் நலமாக உள்ளதாக மகப்பேறு மருத்துவர் தகவல்!

கோவை: வால்பாறை ஆதிவாசி பெண்ணிற்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.


கோவை: வால்பாறை ஆதிவாசி பெண்ணிற்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பாலகிணரு செட்டில்மெண்ட்டை சேர்ந்தவர் சிவராணி மணிகண்டன் (24) கர்ப்பிணிப்பெண். இவருக்கு இரண்டாவது பிரசவம் கர்ப்பகாலத்தில் ஸ்கேன் பரிசோதனையில் இரட்டை குழந்தைகள் எனக்கண்டறியப்பட்டது.

கர்ப்பகாலத்தில் முறையான மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் சோலையார்டேம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கி நன்கு கவனித்துக் கொள்ளப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் பாபு லக்ஷ்மன் ஆலோசனைப்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வால்பாறையில் பிரசவமுன் கவனிப்பு அறையில் கடந்த ஒரு வாரமாக தங்கவைக்கப்பட்டு கவனித்துக் கொள்ளப்பட்டது

இந்நிலையில் நேற்று இரவு சிவலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வட்டார மருத்துவர் ஆலோசனைப்படி கர்ப்பிணிப் பெண்ணை 108 ஆம்புலன்ஸ் மூலமாக இரவு 12.40 மணிக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை அறுவை சிகிச்சை மூலமாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. தாயும் சேயும் நலமாக உள்ளதாக மகப்பேறு மருத்துவர் தெரிவித்தார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...