பல்லடத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்த வடமாநில வாலிபரை மீட்ட தீயணைப்புத் துறையினர்..!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு வழி சாலை சந்திப்பில் திடீரென வடமாநில வாலிபர் ஒருவர் போக்குவரத்து சிக்னல் கம்பத்தின் மேல் ஏறி தலைகீழாகத் தொங்கியபடி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அந்த வாலிபரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு வழி சாலை சந்திப்பில் திடீரென வடமாநில வாலிபர் ஒருவர் போக்குவரத்து சிக்னல் கம்பத்தின் மேல் ஏறி தலைகீழாகத் தொங்கியபடி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அந்த வாலிபரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

திருப்பூர் பல்லடம் நான்கு வழிச்சாலையில், வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் போக்குவரத்து சிக்னல் கம்பத்தின் மீது ஏறி தலைகீழாகத் தொங்கியபடி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.



அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், அவ்வழியே சென்ற கனரக லாரி ஒன்றை நிறுத்தி, அதன் உதவியுடன் அந்த வாலிபரை மீட்டனர்.

அதனைத் தொடர்ந்து, அந்த வாலிபர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த பல்லடம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற வாலிபர், பீகாரைச் சேர்ந்த காகேஸ்வர் பெகரா என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவில் காரணம்பேட்டை பகுதியில் தனது செல்போன், ஓட்டுநர் உரிமங்களை யாரோ வழிப்பறி செய்து கொண்டு தன்னைத் தாக்கிவிட்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

மேலும், அந்த வாலிபர், தனக்கு ஓட்டுநர் உரிமம் தேவை என்றும் கல்குவாரியில் தான் வேலை செய்த இடத்தில் தன்னை வேலைக்கு சேர்த்துக் கொள்ளவில்லை என்றும் என் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என்பதை தெரிவிக்கும் வகையில் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து பல்லடம் போலீஸார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...