கோவை: கோவையில் சிஎஸ்ஐ தேவாலய ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதியில் ரூ.25 கோடி மோசடி நடந்துள்ளதாக தேவாலய பொறுப்பாளர்கள் மீது பாதிரியார் புகார் அளித்துள்ளார்.
கோவை: கோவையில் சிஎஸ்ஐ தேவாலய ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதியில் ரூ.25 கோடி மோசடி நடந்துள்ளதாக தேவாலய பொறுப்பாளர்கள் மீது பாதிரியார் புகார் அளித்துள்ளார்.
கோவை வெள்ளலூர் சி.எஸ்.ஐ. சர்ச் பாதிரியார் கெர்சோம் ஜேக்கப் குற்றப்பிரிவு போலீசில் அளித்துள்ள புகாரில், “ 2005ம் ஆண்டு முதல், கோவை மண்டல சி.எஸ்.ஐ., ஆலய நிர்வாகத்தின் கீழ் பணியாற்றி வருகிறேன். நான் எனது வருங்கால வைப்பு நிதி தொகையை, சி.எஸ்.ஐ., அலுவலகத்திற்கு செலுத்தி வந்தேன்.எனது வருங்கால வைப்பு கணக்கு குறித்து, கேட்டபோது, சி.எஸ்.ஐ., அலுவலக பொருளாளர் எனக்கு எந்த விவரங்களும் தெரிவிக்கவில்லை.
எனது வருங்கால வைப்பு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது மண்டலத்திற்கு உட்பட்ட, 125 சர்ச்சுகளில் பணிபுரிந்து வரும், என்னைப் போன்ற பலரது வருங்கால வைப்பு நிதியை, முறையாக கணக்கில் சேர்க்காமல், சுமார் ரூ. 25 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர்.
இந்த மோசடியில் முன்னாள் பொருளாளர் மங்களத்தாஸ், தற்போதைய பொருளாளர் செல்வகுமார், முன்னாள் செயலாளர் சார்லஸ் சாம்ராஜ், பிஷப் திமோத்தி ரவீந்தர் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது,” என குறிப்பிட்டுள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை வெள்ளலூர் சி.எஸ்.ஐ. சர்ச் பாதிரியார் கெர்சோம் ஜேக்கப் குற்றப்பிரிவு போலீசில் அளித்துள்ள புகாரில், “ 2005ம் ஆண்டு முதல், கோவை மண்டல சி.எஸ்.ஐ., ஆலய நிர்வாகத்தின் கீழ் பணியாற்றி வருகிறேன். நான் எனது வருங்கால வைப்பு நிதி தொகையை, சி.எஸ்.ஐ., அலுவலகத்திற்கு செலுத்தி வந்தேன்.எனது வருங்கால வைப்பு கணக்கு குறித்து, கேட்டபோது, சி.எஸ்.ஐ., அலுவலக பொருளாளர் எனக்கு எந்த விவரங்களும் தெரிவிக்கவில்லை.
எனது வருங்கால வைப்பு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது மண்டலத்திற்கு உட்பட்ட, 125 சர்ச்சுகளில் பணிபுரிந்து வரும், என்னைப் போன்ற பலரது வருங்கால வைப்பு நிதியை, முறையாக கணக்கில் சேர்க்காமல், சுமார் ரூ. 25 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர்.
இந்த மோசடியில் முன்னாள் பொருளாளர் மங்களத்தாஸ், தற்போதைய பொருளாளர் செல்வகுமார், முன்னாள் செயலாளர் சார்லஸ் சாம்ராஜ், பிஷப் திமோத்தி ரவீந்தர் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது,” என குறிப்பிட்டுள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.