திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதி பூளவாடி கிராமத்தில் சாய் கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்திவந்த போலி மருத்துவரை பொதுமக்களின் புகாரினைத் தொடர்ந்து குடிமங்கலம் காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதி பூளவாடி கிராமத்தில் சாய் கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்திவந்த போலி மருத்துவரை பொதுமக்களின் புகாரினைத் தொடர்ந்து குடிமங்கலம் காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள பூளவாடி கிராமத்தில் சாய் கிளினிக் என்ற பெயரில் போலி மருத்துவமனை இயங்குவதாக அதே ஊரைச் சேர்ந்த ஒரு சிலர் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த கிளினிக் சென்ற காவல்துறையினர் அங்கு பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த தவமணி என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் பழனி அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றினார். அந்த அனுபவத்தை வைத்து உடுமலை அருகே பூளவாடி பெரியபட்டி ஜே கிருஷ்ணாபுரம் ஆகிய மூன்று பகுதிகளில் கிளை அமைத்து மருத்துவம் பார்த்து வந்ததாக தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட மருத்துவ உதவி இயக்குநருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அவரின் ஆலோசனைப்படி வட்டார மருத்துவ அலுவலர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பூளவாடி சாய் கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்ததும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான அனைத்து மருந்தையும் அவர் விநியோகம் செய்து வந்ததாகவும் ஊசி போடுவது நோயாளிகளுக்கு குளுக்கோஸ் போடுவது போன்ற பணியையும் செய்து வந்துள்ளார். இதனை அடுத்து இவர் போலி மருத்துவர் என்பது தெரிய வந்துள்ளது. இதன்பின் குடிமங்கலம் காவல்துறையில் இவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் தவமணியை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள பூளவாடி கிராமத்தில் சாய் கிளினிக் என்ற பெயரில் போலி மருத்துவமனை இயங்குவதாக அதே ஊரைச் சேர்ந்த ஒரு சிலர் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த கிளினிக் சென்ற காவல்துறையினர் அங்கு பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த தவமணி என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் பழனி அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றினார். அந்த அனுபவத்தை வைத்து உடுமலை அருகே பூளவாடி பெரியபட்டி ஜே கிருஷ்ணாபுரம் ஆகிய மூன்று பகுதிகளில் கிளை அமைத்து மருத்துவம் பார்த்து வந்ததாக தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட மருத்துவ உதவி இயக்குநருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அவரின் ஆலோசனைப்படி வட்டார மருத்துவ அலுவலர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பூளவாடி சாய் கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்ததும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான அனைத்து மருந்தையும் அவர் விநியோகம் செய்து வந்ததாகவும் ஊசி போடுவது நோயாளிகளுக்கு குளுக்கோஸ் போடுவது போன்ற பணியையும் செய்து வந்துள்ளார். இதனை அடுத்து இவர் போலி மருத்துவர் என்பது தெரிய வந்துள்ளது. இதன்பின் குடிமங்கலம் காவல்துறையில் இவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் தவமணியை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.