நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்ததால் போராட்டம் செய்வதற்காக வந்த இசை கலைஞர்களை சாமர்த்தியமாகப் பேசி, அவர்களின் போராட்டத்தை குன்னூர் காவல் துறையினர் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலமாக மாற்றினர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்ததால் போராட்டம் செய்வதற்காக வந்த இசை கலைஞர்களை சாமர்த்தியமாகப் பேசி, அவர்களின் போராட்டத்தை குன்னூர் காவல் துறையினர் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலமாக மாற்றினர்.
நீலகிரி மாவட்டத்தில் அனைத்து மதம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும், திருமண நிகழ்ச்சிகளுக்கும் குறைந்த அளவே மக்கள் கலந்து கொள்ள அனுமதி உள்ளதாலும் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளதால் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஐம்பதிற்கும் மேற்பட்ட நாகஸ்வரம், தவில் மற்றும் பேண்ட் வாத்தியம் வாசிக்கும் கிராமிய இசைக் கலைஞர்கள் இன்று ஊர்வலமாக சென்று கோட்டாட்சியரிடம் மனு கொடுக்க காவல் துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர்.

ஆனால், போராட்டம் நடத்த அனுமதி அளிக்க முடியாத சூழல் உள்ளதால், அவர்களை ஊர்வலமாக வந்து கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை மேற்கொள்ளுமாறும் அதன்பிறகு, கோட்டாட்சியர் கவனத்திற்கு உங்களது பிரச்சினையைக் கொண்டு செல்கிறோம் என்றும் காவல் துறையினர் சாமர்த்தியமாகப் பேசி பிரச்சினையை சமாளித்தனர்.

இதனைப் புரிந்து கொண்ட இசைக் கலைஞர்கள் புறக்காவல் நிலையம் வரை ஊர்வலமாக வந்து அங்கே பழைய சோகப்பாடல்களான ‘ராஜாபார்ட் ரங்கதுரை' படத்தில் சிவாஜி பாடும் ‘ஜின்ஜினுக்கா சின்னக்கிளி' என்ற பாடலையும் ‘கடவுள் உள்ளமே... கருணை இ்ல்லமே' என்ற பாடலையும் உருக்கமாகப் பாடிவிட்டு தங்களது நிலையினை பொது மக்களுக்கும் அனுமதியை சாமர்த்தியமாக மறுத்து நிகழ்சியை தங்களுக்கு சாதமாக்கிக்கொண்ட காவல் துறைக்கும் இசையால் புரிய வைத்துவிட்டு சென்றனர். போராட வந்தவர்கள் கையில் கொரோனா விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை காவல் துறையினர் கொடுத்ததுதான் நிகழ்ச்சியில் ஹைலைட்.
நீலகிரி மாவட்டத்தில் அனைத்து மதம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும், திருமண நிகழ்ச்சிகளுக்கும் குறைந்த அளவே மக்கள் கலந்து கொள்ள அனுமதி உள்ளதாலும் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளதால் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஐம்பதிற்கும் மேற்பட்ட நாகஸ்வரம், தவில் மற்றும் பேண்ட் வாத்தியம் வாசிக்கும் கிராமிய இசைக் கலைஞர்கள் இன்று ஊர்வலமாக சென்று கோட்டாட்சியரிடம் மனு கொடுக்க காவல் துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர்.
ஆனால், போராட்டம் நடத்த அனுமதி அளிக்க முடியாத சூழல் உள்ளதால், அவர்களை ஊர்வலமாக வந்து கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை மேற்கொள்ளுமாறும் அதன்பிறகு, கோட்டாட்சியர் கவனத்திற்கு உங்களது பிரச்சினையைக் கொண்டு செல்கிறோம் என்றும் காவல் துறையினர் சாமர்த்தியமாகப் பேசி பிரச்சினையை சமாளித்தனர்.
இதனைப் புரிந்து கொண்ட இசைக் கலைஞர்கள் புறக்காவல் நிலையம் வரை ஊர்வலமாக வந்து அங்கே பழைய சோகப்பாடல்களான ‘ராஜாபார்ட் ரங்கதுரை' படத்தில் சிவாஜி பாடும் ‘ஜின்ஜினுக்கா சின்னக்கிளி' என்ற பாடலையும் ‘கடவுள் உள்ளமே... கருணை இ்ல்லமே' என்ற பாடலையும் உருக்கமாகப் பாடிவிட்டு தங்களது நிலையினை பொது மக்களுக்கும் அனுமதியை சாமர்த்தியமாக மறுத்து நிகழ்சியை தங்களுக்கு சாதமாக்கிக்கொண்ட காவல் துறைக்கும் இசையால் புரிய வைத்துவிட்டு சென்றனர். போராட வந்தவர்கள் கையில் கொரோனா விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை காவல் துறையினர் கொடுத்ததுதான் நிகழ்ச்சியில் ஹைலைட்.