பொள்ளாச்சி நியாயவிலைக் கடையில் தரமற்ற அரிசி விநியோகம்... போராட்டத்தில் குதித்த பொது மக்கள்..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் தரமற்ற அரிசியை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தநிலையில், வெகுண்டெழுந்த பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் தரமற்ற அரிசியை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தநிலையில், வெகுண்டெழுந்த பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.

பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒக்கிலிபாளையம் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில், அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று ரேஷன் பொருட்கள் வாங்க வந்தனர். அப்போது, நியாயவிலைக் கடையில் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட புழுங்கலரிசி முழுவதிலும் கற்களும் குப்பைகௐளும் நிறைந்து காணப்பட்டன. பொதுமக்கள் இதுகுறித்து நியாயவிலைக் கடை விற்பனையாளரிடம் கேட்டபோது, அவர் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.



இதனால், வெகுண்டெழுந்த பொதுமக்கள், தாங்கள் வாங்கிய தரமற்ற அரிசியை நியாய விலைக் கடை முன்பு வைத்து திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த நியாய விலைக் கடையில் எடை குறைவாகவும், தரமில்லாத பொருட்களும் தொடர்ந்து வழங்கி வருவதாகவும், ஏதாவது ஒரு மளிகைப் பொருட்கள் வாங்கினால் மட்டுமே நியாயவிலைக்கடை பொருள்கள் வழங்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் தாங்கள் வாங்கிய தரமற்ற அரிசியை நியாயவிலைக் கடையிலேயே திருப்பிக் கொடுத்துவிட்டுத் திரும்பிச் சென்றதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...