பொள்ளாச்சியில் போக்குவரத்து நெரிசல்... சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட மூன்று சாலைகளின் விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க கூடுதல் அதிகாரிகளை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட மூன்று சாலைகளின் விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க கூடுதல் அதிகாரிகளை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி நகரப் பகுதியில் சாலைகளின் இருபுறமும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சாலை விரிவாக்கப் பணிகள் ரூ.30 கோடி செலவில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதற்காக நடைபாதை மேடை மற்றும் சாக்கடை கால்வாய்கள் கட்டும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



இந்தநிலையில், மத்திய பேருந்து நிலையம், மற்றும் சார் ஆட்சியர் அலுவலகம் அருகே சாலைகளை அகலபடுத்தும் பணிகளுக்காக ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டு குவிக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். ஏற்கெனவே வாகன நெரிசல் அதிகமுள்ள பகுதி இது. தற்போது, சாலைப் பணிகளுக்காக கொட்டப்பட்டுள்ள ஜல்லிக் கற்களாலும் சாலைப் பணிகள் நடைபெறுவதாலும் போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகமாக உள்ளது.



எனவே, இதுபோன்ற பகுதிகளில் சாலைப் பணிகளை அதிகாரிகள் இரவு நேரங்களில் மேற்கொண்டால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது. அன்றாட பணிகளும் பாதிக்காது. அதோடு, பகல் நேரங்களில் இப்பகுதியில் கூடுதல் அதிகாரிகளை நியமித்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...