ஆபத்தை விளைவிக்கும் ‘பிங்க்' நிற ‘வாட்ஸ்அப்' போலீஸார் எச்சரிக்கை..!

கோவை: ‘பிங்க்' நிறத்தில் உலாவரும் ‘வாட்ஸ்அப்' செயலி மொபைல் போனில் உள்ள தகவல்களை 'ஹேக்' செய்யப்படலாம்' என உலா வரும் தகவல் குறித்து போலீஸார் எச்சரித்துள்ளனர்.


கோவை: ‘பிங்க்' நிறத்தில் உலாவரும் ‘வாட்ஸ்அப்' செயலி மொபைல் போனில் உள்ள தகவல்களை 'ஹேக்' செய்யப்படலாம்' என உலா வரும் தகவல் குறித்து போலீஸார் எச்சரித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக, ‘பிங்க்' நிறத்தில் ‘வாட்ஸ்அப்' செயலியை பயன்படுத்தலாம் என்று ஒரு தகவல் பரவி வருகிறது. இத்தகவலுடன் ‘வாட்ஸ்அப்' பிங்க் நிறத்தில் பயன்படுத்த ஒரு இணைய முகவரியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கும் ‘வாட்ஸ்அப்' மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என, தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட அந்த இணைய முகவரியை, ‘கிளிக்' செய்தால், நமது ஸ்மார்ட்போனில் ஆபத்தை விளைவிக்கும் செயலி தானாகவே பதிவேறிவிட வாய்ப்புள்ளது. இதன்மூலம் நமது மொபைல் போனில் உள்ள விபரங்களை ஹேக்கர்கள் இயக்க முடியும் என கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சைபர் க்ரைம் போலீஸார் எச்சரிக்கை செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார், ‘‘இந்த ‘பிங்க்' நிற ‘வாட்ஸ்அப்' தகவல் போலியானது. பயனர்களின் விபரங்களை சேகரிக்க ஹேக்கர்கள் திட்டமிட்டிருக்கலாம். ஆனால், போலியான தகவல்களை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு அனுப்பக் கூடாது. பயனர்கள் உஷாராக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...