ஈமு நிதி நிறுவனம் மோசடி வழக்கில், 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஈஸ்வரமூர்த்தி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கோவை: ஈமு நிதி நிறுவனம் மோசடி வழக்கில், 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஈஸ்வரமூர்த்தி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திருப்பூர், காங்கேயம் மெயின் ரோட்டில் ஸ்ரீ சபரி ஆண்டவர் ஈமு கோழி நிதி நிறுவனம் நடத்தி வந்தார் ஜோதிடர் ஈஸ்வரமூர்த்தி(50).
இந்நிறுவனத்தில், டெபாசிட் செய்தவர்களிடம், 2012ல், 16 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், ஈஸ்வரமூர்திக்கு, கோவை டான்பிட் நீதிமன்றம், 10 ஆண்டு சிறை, 15 லட்சம் அபராதம் விதித்து, கடந்த 15ம் தேதி தீர்ப்பளித்தது.
தீர்ப்பின் போது, ஈஸ்வரமூர்த்தி ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஈஸ்வரமூர்த்தி தானாக முன் வந்து நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை சிறையிலடைக்க, நீதிபதி ரவி உத்தரவிட்டார்.
திருப்பூர், காங்கேயம் மெயின் ரோட்டில் ஸ்ரீ சபரி ஆண்டவர் ஈமு கோழி நிதி நிறுவனம் நடத்தி வந்தார் ஜோதிடர் ஈஸ்வரமூர்த்தி(50).
இந்நிறுவனத்தில், டெபாசிட் செய்தவர்களிடம், 2012ல், 16 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், ஈஸ்வரமூர்திக்கு, கோவை டான்பிட் நீதிமன்றம், 10 ஆண்டு சிறை, 15 லட்சம் அபராதம் விதித்து, கடந்த 15ம் தேதி தீர்ப்பளித்தது.
தீர்ப்பின் போது, ஈஸ்வரமூர்த்தி ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஈஸ்வரமூர்த்தி தானாக முன் வந்து நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை சிறையிலடைக்க, நீதிபதி ரவி உத்தரவிட்டார்.