திருப்பூரில் இரவு நேர ஊரடங்களை மீறியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் இரவு நேர ஊரடங்களை மீறியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதி வேகத்தில் பரவி வரும் சூழ்நிலையில் கடந்த நாட்களில் இல்லாத அளவுக்கு,தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,000ஐ கடந்துள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 20) முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து இரவு நேர ஊரடங்கு மீறல்களை கண்காணிக்க திருப்பூர் மாவட்டத்தில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். திருப்பூர் ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையில் உட்பட முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனையிடப்பட்டன.

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் தவிர, விதிமுறையை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதி வேகத்தில் பரவி வரும் சூழ்நிலையில் கடந்த நாட்களில் இல்லாத அளவுக்கு,தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,000ஐ கடந்துள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 20) முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து இரவு நேர ஊரடங்கு மீறல்களை கண்காணிக்க திருப்பூர் மாவட்டத்தில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். திருப்பூர் ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையில் உட்பட முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனையிடப்பட்டன.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் தவிர, விதிமுறையை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது.