கோவையில் இருந்து குறைவான பயணிகளுடன் வெளியூர் பேருந்துகள் இயக்கம்!

கோவை: கொரோனா அச்சம் காரணமாக கோவையில் இருந்து வெளியூர் செல்ல பயணிகள் ஆர்வம் காட்டவில்லை.


கோவை: கொரோனா அச்சம் காரணமாக கோவையில் இருந்து வெளியூர் செல்ல பயணிகள் ஆர்வம் காட்டவில்லை.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவையடுத்து இரவு நேரங்களில் வெளி மாநிலம் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோவை திருவள்ளுவர் பேருந்து நிலையத்திலிருந்து இரவு நேரங்களில் இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகள் சேவை ரத்து செய்யப்பட்டது.

வெளி மாநிலம், வெளி மாவட்டங்களுக்கு இன்று முதல் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி பேருந்து நிலையத்தில் 30 அரசு விரைவு பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. பயணிகள் வருகைக்கு ஏற்ப சென்னை, விழுப்புரம் நெல்லை, கன்னியாகுமரி நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.

பெங்களூர் திருப்பதி ஆகிய வெளிமாநில நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சிங்காநல்லூரில் இருந்து வெளியூர் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டது. வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட 140 பேருந்துகளில் 40 பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன. பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப 6:30 மணி முதல் 12 மணி வரை வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.

பயணிகளின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். கை கழுவ சானிடைசர் வழங்கப்பட்டது. சமூக இடைவெளி விட்டு இருக்கையில் அமர வைக்கப்பட்டனர். எனினும் கொரோனா அச்சம் காரணமாக பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...