வால்பாறை: கொரோனா காரணமாக வால்பாறை கருமலை ஸ்ரீ பாலாஜி கோயில் மூடப்பட்டதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வால்பாறை: கொரோனா காரணமாக வால்பாறை கருமலை ஸ்ரீ பாலாஜி கோயில் மூடப்பட்டதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வால்பாறை அருகே உள்ள கருமலை ஸ்ரீ பாலாஜி கோயில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த கோயிலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்து வருகின்றனர். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக கடந்த 15ம் தேதி முதல் கோயில் மூடப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வால்பாறை அருகே உள்ள கருமலை ஸ்ரீ பாலாஜி கோயில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த கோயிலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்து வருகின்றனர். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக கடந்த 15ம் தேதி முதல் கோயில் மூடப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.