சிறுவாணி சாலையில் இடி விழுந்து மரம் தீ பற்றியதால் போக்குவரத்து பாதிப்பு!

கோவை: கோவை-சிறுவாணி சாலையில் 100 ஆண்டு பழமையான வாகை மரம் இடி விழுந்து கொழுந்துவிட்டு எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: கோவை-சிறுவாணி சாலையில் 100 ஆண்டு பழமையான வாகை மரம் இடி விழுந்து கொழுந்துவிட்டு எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் கோவையில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் சூறை காற்றுடன் மழை பெய்து வந்தது. நேற்று இரவு அதிகாலை கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் சூறை காற்றுடன் மழை பெய்தது.



இதில் சிறுவாணி சாலை நல்லூர் வயல் பகுதியில் அதிகமான இடி, மின்னல் காணப்பட்ட நிலையில் சாலை ஓரத்தில் இருந்த வாகை மரத்தில் இடி தாக்கியதில் மரம் கொழுந்துவிட்டு எரிந்தது.

இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவலளித்தனர் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மரத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தனர். எனினும் தீ சரியாக அமைக்கப்படாததால் மீண்டும் மரம் கொழுந்துவிட்டு எரிந்தது. இடி விழுந்ததால் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக மரத்தில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வந்தனர்.



இந்த நிலையில் இடி விழுந்து தீ பற்றியதால் வலு குறைந்த மரம் திடீரென உடைந்து சாலையில் விழுந்தது.



இதையடுத்து தீயணைப்பு துறையினர் சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர். கடந்த சில நாட்களாக மழை பெய்தது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் இடி தாக்கியதில் பழமையான மரம் முற்றிலும் எரிந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...