வால்பாறை: இரவு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் வால்பாறையில் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
வால்பாறை: இரவு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் வால்பாறையில் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் மதுரை, திருநெல்வேலி, கோவை, ஈரோடு, தர்மபுரி, திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
வெளியூர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அடிக்கடி சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். எனவே வால்பாறையிலிருந்து காலை 4 மணி முதல் இரவு 10 மணி அடிக்கடி வெளியூர்களுக்கு பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது. குறிப்பாக பொள்ளாச்சி, கோவை, பழனி, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு அடிக்கடி அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வால்பாறையிலிருந்து தேயிலை தோட்ட பகுதிகள் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட வெளியூர் செல்லும் அரசு பேருந்துகள் இரவு ஏழரை மணி அளவில் நிறுத்தப்பட்டுவிட்டன.

மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை இயக்கப்பட்ட பேருந்துகளில் மக்கள் கூட்டமின்றி காலி பேருந்துகளே பொள்ளாச்சி சென்றன. இதன் காரணமாக வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையம் வெறிச்சோடியது
கோவை மாவட்டம் வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் மதுரை, திருநெல்வேலி, கோவை, ஈரோடு, தர்மபுரி, திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
வெளியூர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அடிக்கடி சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். எனவே வால்பாறையிலிருந்து காலை 4 மணி முதல் இரவு 10 மணி அடிக்கடி வெளியூர்களுக்கு பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது. குறிப்பாக பொள்ளாச்சி, கோவை, பழனி, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு அடிக்கடி அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வால்பாறையிலிருந்து தேயிலை தோட்ட பகுதிகள் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட வெளியூர் செல்லும் அரசு பேருந்துகள் இரவு ஏழரை மணி அளவில் நிறுத்தப்பட்டுவிட்டன.
மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை இயக்கப்பட்ட பேருந்துகளில் மக்கள் கூட்டமின்றி காலி பேருந்துகளே பொள்ளாச்சி சென்றன. இதன் காரணமாக வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையம் வெறிச்சோடியது