கோவை: கொரோனா பரவலை கருத்தில் கொண்டு புதன்கிழமை முதல் இரவு 7:00 மணிக்குள் வணிக நிறுவனங்களை மூடுவது என வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கோவை: கொரோனா பரவலை கருத்தில் கொண்டு புதன்கிழமை முதல் இரவு 7:00 மணிக்குள் வணிக நிறுவனங்களை மூடுவது என வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் கூறுகையில், "எங்கள் சங்கத்தில் 3,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். கோவிட் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு, நாங்கள் அவசர கூட்டத்தை நடத்தினோம்.
தொற்று நோயை தடுப்பதில் வர்த்தக சமூகம் எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பங்கேற்பாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து புதன்கிழமை முதல் நாள்தோறும் இரவு 7:00 மணிக்குள் வணிக நிறுவனங்களை மூட ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவும், இரவு 7:00 மணிக்குள் வணிக நிறுவனங்களை மூடவும் அந்தந்த சங்கங்களுக்கு அறிவுறுத்தும்படி வணிகர் சங்கங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன," என்று கூறியுள்ளார்.
இது குறித்து வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் கூறுகையில், "எங்கள் சங்கத்தில் 3,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். கோவிட் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு, நாங்கள் அவசர கூட்டத்தை நடத்தினோம்.
தொற்று நோயை தடுப்பதில் வர்த்தக சமூகம் எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பங்கேற்பாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து புதன்கிழமை முதல் நாள்தோறும் இரவு 7:00 மணிக்குள் வணிக நிறுவனங்களை மூட ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவும், இரவு 7:00 மணிக்குள் வணிக நிறுவனங்களை மூடவும் அந்தந்த சங்கங்களுக்கு அறிவுறுத்தும்படி வணிகர் சங்கங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன," என்று கூறியுள்ளார்.