கோவையில் வணிக நிறுவனங்களை இரவு 7 மணிக்குள் மூட முடிவு!

கோவை: கொரோனா பரவலை கருத்தில் கொண்டு புதன்கிழமை முதல் இரவு 7:00 மணிக்குள் வணிக நிறுவனங்களை மூடுவது என வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


கோவை: கொரோனா பரவலை கருத்தில் கொண்டு புதன்கிழமை முதல் இரவு 7:00 மணிக்குள் வணிக நிறுவனங்களை மூடுவது என வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் கூறுகையில், "எங்கள் சங்கத்தில் 3,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். கோவிட் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு, நாங்கள் அவசர கூட்டத்தை நடத்தினோம்.

தொற்று நோயை தடுப்பதில் வர்த்தக சமூகம் எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பங்கேற்பாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து புதன்கிழமை முதல் நாள்தோறும் இரவு 7:00 மணிக்குள் வணிக நிறுவனங்களை மூட ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவும், இரவு 7:00 மணிக்குள் வணிக நிறுவனங்களை மூடவும் அந்தந்த சங்கங்களுக்கு அறிவுறுத்தும்படி வணிகர் சங்கங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன," என்று கூறியுள்ளார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...