கொரோனா தொற்று பரவல்: கோவை குற்றாலம் அருவி தேதி அறிவிக்கப்படாமல் மூடப்படுவதாக வனத்துறை அறிவிப்பு!

கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவை குற்றாலம் அருவி தேதி அறிவிக்கப்படாமல் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.


கோவை: கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவை குற்றாலம் அருவி தேதி அறிவிக்கப்படாமல் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

கோவையில் முக்கிய சுற்றுலா தளமாக திகழக்கூடிய கோவை குற்றாலம். இந்த அருவியில் குளிப்பதற்காக வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து பல பேர் இங்கு வருவது வழக்கம். விடுமுறை நாட்கள் மற்றும் ஓய்வு நாட்களில் இங்கு கூட்டம் கலைகட்டும்.

இந்நிலையில், ஊரடங்கு மற்றும் பரவல் காரணமாக இன்று முதல் கோவை குற்றாலம் மூடப்படுகிறது. கோவையில் முக்கிய சுற்றுலாத்தலமாக கோவை குற்றால அருவியில் குளிக்க வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இதனிடையே, தற்போது தொற்று அதிகரித்துள்ளது. எனவே 50 சதவீத சுற்றுலா பயணிகள் மட்டுமே அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டன. அதன்படி 1000 பேரை மட்டுமே அருவிக்குச் செல்ல வனத்துறையினர் அனுமதி தந்தனர்.

இந்த நிலையில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, கோவை குற்றால அருவி இன்று செவ்வாய்க்கிழமை முதல் தேதி அறிவிக்கப்படாமல் மூடப்படுவதாக வனத் துறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...