கோவை: கோவை சிறுமுகை அருகே போலீஸ் எஸ்.ஐ க்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: கோவை சிறுமுகை அருகே போலீஸ் எஸ்.ஐ க்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறுமுகை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முனிசா மி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை பணியில் இருந்தனர். அப்போது, பொகழூர் அருகே மயில்சாமி என்பவரின் தோட்டத்தில் உள்ள தென்னைமரத்தின் மட்டை மயில்சாமி என்பவர் மீது விழுந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனுசாமி மற்றும் போலீசார் பொகலூர் செல்வதற்காக மாலை 6.30 மணிக்கு சிறுமுகை நீலிப்பாளையம் ரோட்டில் ராமணன் தோட்டம் அருகில் சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனங்களில் 4 பேர் வேகமாக வந்தனர்.
இதையடுத்து, உடனே போலீசார் 2 வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதை தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் முனுசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முனுசாமி சிறுமுகை போலீசில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து பொகலூர் வட வள்ளியை சேர்ந்த சந்தோஷ் (26), ரங்கசாமி (31), நந்தகுமார் (31) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சுரேஷ் (28) என்பவரை தேடி வருகின்றனர்.
சிறுமுகை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முனிசா மி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை பணியில் இருந்தனர். அப்போது, பொகழூர் அருகே மயில்சாமி என்பவரின் தோட்டத்தில் உள்ள தென்னைமரத்தின் மட்டை மயில்சாமி என்பவர் மீது விழுந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனுசாமி மற்றும் போலீசார் பொகலூர் செல்வதற்காக மாலை 6.30 மணிக்கு சிறுமுகை நீலிப்பாளையம் ரோட்டில் ராமணன் தோட்டம் அருகில் சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனங்களில் 4 பேர் வேகமாக வந்தனர்.
இதையடுத்து, உடனே போலீசார் 2 வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதை தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் முனுசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முனுசாமி சிறுமுகை போலீசில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து பொகலூர் வட வள்ளியை சேர்ந்த சந்தோஷ் (26), ரங்கசாமி (31), நந்தகுமார் (31) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சுரேஷ் (28) என்பவரை தேடி வருகின்றனர்.