கோவை: வால்பாறை நகரைச் சுற்றி சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: வால்பாறை நகரைச் சுற்றி சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையின் முக்கிய பகுதியான வாழைத்தோட்டம் அண்ணா நகர் புதுத் தோட்டம் பகுதியில் சிறுத்தை நடமாடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தி தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், தற்போது வாழைத்தோட்டம் பகுதியை ஒட்டியுள்ள ஆற்றுப்படுகையிலும் நல்ல காத்து எஸ்டேட் பிரிவு சாலையில் உள்ள தேயிலைத் தோட்டத்திலும் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
வனவர் முனியாண்டி தலைமையில் இரண்டு குழுக்கள் சிறுத்தையை பிடிக்க வைத்துள்ள கூண்டுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் தீவிர ரோந்து பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் வீட்டில் சேகரமாகும் மாமிசக் கழிவுகளை குழிதோண்டி புதைக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையின் முக்கிய பகுதியான வாழைத்தோட்டம் அண்ணா நகர் புதுத் தோட்டம் பகுதியில் சிறுத்தை நடமாடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தி தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், தற்போது வாழைத்தோட்டம் பகுதியை ஒட்டியுள்ள ஆற்றுப்படுகையிலும் நல்ல காத்து எஸ்டேட் பிரிவு சாலையில் உள்ள தேயிலைத் தோட்டத்திலும் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
வனவர் முனியாண்டி தலைமையில் இரண்டு குழுக்கள் சிறுத்தையை பிடிக்க வைத்துள்ள கூண்டுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் தீவிர ரோந்து பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் வீட்டில் சேகரமாகும் மாமிசக் கழிவுகளை குழிதோண்டி புதைக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.