மேட்டுப்பாளையம் காவல் நிலைய மற்றும் காவலர் குடியிருப்புகளில் உள்ள, நான்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கோவை: கோவை மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் காவலர் குடியிருப்புகளில் உள்ள, நான்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட தாலுகாவில் 25 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் காவலர் குடியிருப்புகளில் உள்ள, நான்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட தாலுகாவில் 25 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் காவலர் குடியிருப்புகளிலும் சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதில் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு எஸ்.ஐ., காவலர்கள் குடியிருப்பில், மூன்று எஸ்.ஐ.,களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பின்னர், காவலர் குடியிருப்புகளில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு, சளி மாதிரி எடுக்கப்பட்டது. காரமடை அருகே பொன்னம்மாள் கார்டனில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன், மருமகள் ஆகிய, நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், நேற்று மொத்தமாக, 25 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் மேட்டுப்பாளையம் தனியார் மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை, சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப் இன்ஸ்பெக்டருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் போலீஸ் நிலைய வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மேலும் போலீஸ் நிலைய குடியிருப்பில் இருந்த மற்றொரு சப் இன்ஸ்பெக்டருக்கு தொற்று உறுதியானது.

இதனைத் தொடர்ந்து, குடியிருப்பு பகுதி போலீஸ் அலுவலகங்களில் கடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இருந்தவர் கூறப்படும் 40 பேருக்கு பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதில் 20 பேர் நேற்று ஜோதிபுரம் மருத்துவ முகாமில் பரிசோதனை செய்து கொண்டனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...