கோவை: கொரோனா தொற்றைத் தடுக்க நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கான கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோவை: கொரோனா தொற்றைத் தடுக்க நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கான கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என பல புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் 20ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த நிலையில் மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி கூறுகையில்,“ பார்கள் அனைத்தும் விடுமுறை விடப்படும். இரவு 9 மணி வரை மட்டுமே டாஸ்மாக் செயல்படும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மற்ற நாட்களில் மதுபானம் வாங்க வரக்கூடிய வாடிக்கையாளர்கள் 10 மீட்டர் இடைவெளி விட்டு நின்று மதுபானங்கள் வாங்க வேண்டும். சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மது வாங்குவதற்கு முன்பு சானிடைசர் மூலம் கையை சுத்தம் செய்ய வேண்டும். வரிசையில் வரக்கூடியவர்களுக்கு டோக்கன் அடிப்படையில் மதுபானங்கள் வழங்கப்படும்,” என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என பல புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் 20ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த நிலையில் மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி கூறுகையில்,“ பார்கள் அனைத்தும் விடுமுறை விடப்படும். இரவு 9 மணி வரை மட்டுமே டாஸ்மாக் செயல்படும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மற்ற நாட்களில் மதுபானம் வாங்க வரக்கூடிய வாடிக்கையாளர்கள் 10 மீட்டர் இடைவெளி விட்டு நின்று மதுபானங்கள் வாங்க வேண்டும். சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மது வாங்குவதற்கு முன்பு சானிடைசர் மூலம் கையை சுத்தம் செய்ய வேண்டும். வரிசையில் வரக்கூடியவர்களுக்கு டோக்கன் அடிப்படையில் மதுபானங்கள் வழங்கப்படும்,” என்று கூறியுள்ளார்.