கோவையில் இருந்து இரவு 9:00 மணிக்கு மேல் விமான சேவை இல்லையென்பதால் ஊரடங்கால் பாதிப்பு இல்லை!

கோவை: கோவை விமானநிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு மேல் எந்த விமானசேவையும் இயக்கப்படுவதில்லை என்பதால் ஊரடங்கால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இல்லை.


கோவை: கோவை விமானநிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு மேல் எந்த விமானசேவையும் இயக்கப்படுவதில்லை என்பதால் ஊரடங்கால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

தமிழகம் முழுவதும் நாளை முதல் இரவு 10:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், "கோவை விமான நிலையத்தில் நோய்தொற்று பரவலுக்கு முன் வழக்கமாக இரவு 11:00 மணி வரை விமானங்கள் இயக்கப்பட்டன. அதிகாலை 4:00 மணி முதல் மீண்டும் விமான சேவைகள் தொடங்கின.

தற்பொழுது மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள காரணத்தால் அங்கு விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது கோவையில் தினமும் இரவு 9:00 மணிக்கு மேல் எந்த விமானமும் புறப்படுவதும் இல்லை வேறு நகரங்களிலிருந்துகோவையில் தரையிறங்குவதும் இல்லை.

ஏர் அரேபியா நிறுவனம் அதிகாலையில் ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் விமானங்கள் இயக்குகிறது. அந்த விமானம் அதிகாலை 4:00 மணியளவில் தரையிறங்கி அரை மணி நேரத்துக்குள் மீண்டும் புறப்பட்டு சென்று விடுகிறது. எனவே தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு கோவை விமான நிலையத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது." இவ்வாறு, ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...