கோவை: கோவையில் செயினை பறிக்க முயன்ற இளைஞரை, பெண் ஒருவர் பொதுமக்கள் துணையுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
கோவை: கோவையில் செயினை பறிக்க முயன்ற இளைஞரை, பெண் ஒருவர் பொதுமக்கள் துணையுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
கோவை சூலூரை அடுத்துள்ள வதம்பச்சேரி பகுதியை சேர்ந்த லோகநாயகி (30) நேற்று மொபட்டில் காமநாயக்கன் பாளையத்தில் மளிகை பொருட்கள் வாங்கச் சென்றார்.
மளிகை பொருட்கள் வாங்கி விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு இளைஞர்பின் தொடர்ந்து வந்துஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் யோகநாயகி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். சுதாரித்துக்கொண்ட லோகநாயகி நகையை இறுக்கமாகப் பிடித்து கொண்டு இளைஞரை தள்ளிவிட்டார். இதில் நிலை தடுமாறி அந்த இளைஞர் கீழே விழுந்தார்.
லோகநாயகி தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அவரை மடக்கி பிடித்த படி கூச்சல் போட்டார். அவரது கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இளைஞரை பிடித்து சுல்தான் பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திருச்சி லால்குடி யைச் சேர்ந்த ராஜதுரை (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுபோன்று சூலூர் அடுத்துள்ள கரையான் பாளையத்தைச் சேர்ந்த சாம்சங், வீட்டு மதில் சுவர் மீது நேற்று நள்ளிரவு ஒருவர் நடந்து சென்றதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். சுதாரித்த மக்கள், அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் வீட்டு உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இளைஞனை கைது செய்தனர்.
அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பொன் ஜோஸ் (21) என்பது தெரியவந்தது. திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை சூலூர் போலீசார் கைது செய்தனர். சூலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கஞ்சா கடத்தல், வழிப்பறி போன்ற செயல்கள் அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை சூலூரை அடுத்துள்ள வதம்பச்சேரி பகுதியை சேர்ந்த லோகநாயகி (30) நேற்று மொபட்டில் காமநாயக்கன் பாளையத்தில் மளிகை பொருட்கள் வாங்கச் சென்றார்.
மளிகை பொருட்கள் வாங்கி விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு இளைஞர்பின் தொடர்ந்து வந்துஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் யோகநாயகி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். சுதாரித்துக்கொண்ட லோகநாயகி நகையை இறுக்கமாகப் பிடித்து கொண்டு இளைஞரை தள்ளிவிட்டார். இதில் நிலை தடுமாறி அந்த இளைஞர் கீழே விழுந்தார்.
லோகநாயகி தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அவரை மடக்கி பிடித்த படி கூச்சல் போட்டார். அவரது கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இளைஞரை பிடித்து சுல்தான் பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திருச்சி லால்குடி யைச் சேர்ந்த ராஜதுரை (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுபோன்று சூலூர் அடுத்துள்ள கரையான் பாளையத்தைச் சேர்ந்த சாம்சங், வீட்டு மதில் சுவர் மீது நேற்று நள்ளிரவு ஒருவர் நடந்து சென்றதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். சுதாரித்த மக்கள், அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் வீட்டு உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இளைஞனை கைது செய்தனர்.
அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பொன் ஜோஸ் (21) என்பது தெரியவந்தது. திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை சூலூர் போலீசார் கைது செய்தனர். சூலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கஞ்சா கடத்தல், வழிப்பறி போன்ற செயல்கள் அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.