கோவை: கோவையில் பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்த இந்து முன்னணி வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: கோவையில் பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்த இந்து முன்னணி வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் நேற்று செல்வபுரம் பகுதியில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதை இரண்டு பேர் மறைந்து நின்று கற்களை கொண்டு தாக்கினர். இதில் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

அதனை தொடர்ந்து ஓட்டுநர் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்து கண்ணாடியை உடைத்த நபர்களை தேடி வந்தன.
இந்த நிலையில், இன்று விசாரணையில் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ராகுல் வயது 19, ராஜேந்திரன் வயது 20, இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதும் இவர்கள் கல்லூரியில் படிக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் பேருந்தை கல் வீசி உடைத்ததை ஒத்துக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவையில் நேற்று செல்வபுரம் பகுதியில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதை இரண்டு பேர் மறைந்து நின்று கற்களை கொண்டு தாக்கினர். இதில் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
அதனை தொடர்ந்து ஓட்டுநர் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்து கண்ணாடியை உடைத்த நபர்களை தேடி வந்தன.
இந்த நிலையில், இன்று விசாரணையில் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ராகுல் வயது 19, ராஜேந்திரன் வயது 20, இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதும் இவர்கள் கல்லூரியில் படிக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் பேருந்தை கல் வீசி உடைத்ததை ஒத்துக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.