கோவை: கோவையில் கஞ்சா விற்ற அண்ணன் தம்பி உட்பட 4 பேர் கைது செய்த போலீசார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் கஞ்சா விற்ற அண்ணன் தம்பி உட்பட 4 பேர் கைது செய்த போலீசார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை சூலூர் பாப்பம்பட்டி அருகே உள்ள பாரதிபுரத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, பாரதிபுரம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் நின்றுகொண்டிருந்தன. அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில் கூறினர். அப்போது, அவர்களை பரிசோதனை செய்தபோது கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஒடிசாவைச் சேர்ந்த சுமந்தா பிஷ்வாள் (31) மற்றும் இவரது அண்ணன் சுஸ்மந் பிஷ்வள் (31) என்பதும் இவர்கள் இருவரும் சூலூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் பகுதிகள் தங்கி தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும், இவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிளும் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.
இதேபோன்று பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் ஒடிசாவை சேர்ந்த பிரகாஷ் குமார் (27), கோரிபாளையத்தை சேர்ந்த கிருபாகரன் (19) என்பதும் அவர்கள் தற்போது காடம்பாடி பகுதியில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா 2 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து நான்கு வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை சூலூர் பாப்பம்பட்டி அருகே உள்ள பாரதிபுரத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, பாரதிபுரம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் நின்றுகொண்டிருந்தன. அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில் கூறினர். அப்போது, அவர்களை பரிசோதனை செய்தபோது கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஒடிசாவைச் சேர்ந்த சுமந்தா பிஷ்வாள் (31) மற்றும் இவரது அண்ணன் சுஸ்மந் பிஷ்வள் (31) என்பதும் இவர்கள் இருவரும் சூலூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் பகுதிகள் தங்கி தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும், இவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிளும் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.
இதேபோன்று பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் ஒடிசாவை சேர்ந்த பிரகாஷ் குமார் (27), கோரிபாளையத்தை சேர்ந்த கிருபாகரன் (19) என்பதும் அவர்கள் தற்போது காடம்பாடி பகுதியில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா 2 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து நான்கு வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.