உடுமலை அருகே மதுபான கடையை உடைத்து திருட முயன்ற ஒருவர் கைது; இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பாப்பம்பட்டியில் டாஸ்மாக் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் கடை விற்பனையாளர், கடையை பூட்டி விட்டு அருகிலுள்ள வீட்டில் தங்கியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பாப்பம்பட்டியில் டாஸ்மாக் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் கடை விற்பனையாளர், கடையை பூட்டி விட்டு அருகிலுள்ள வீட்டில் தங்கியுள்ளார்.

அப்போது நள்ளிரவு ஏதோ சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது, கடையின் முன்பு இருசக்கர வாகனங்களில் வந்த நபர்கள், கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, அங்கு சென்று கடை முன் நின்று கொண்டிருந்தவர்களை பிடிக்க முயற்சி செய்த போது இருவர் தப்பினர், ஒருவர் பிடிப்பட்டார்.

மூவரும் மதுபான கடையை உடைத்து உள்ளே இருந்து பணம் மற்றும் மதுபானங்களை திருட முயற்சித்ததாகவும் அதில் இந்த கடையின் ஷட்டர் பகுதி மற்றும் சுவரில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து உடுமலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின் அவர்கள் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபரின் பெயர் ஜேசுதாஸ் (20) என்பதும் அவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள வயலூர் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் மீதமுள்ள இருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...