கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாநகர் முழுவதும் காய்ச்சல் பரிசோதனை அதிகரிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். சளி காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
அதேபோல, பொது மக்கள் முக கவசம் அணிந்து வெளியே செல்கிறீர்களா? சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா? என கண்காணிக்க கோவை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் 40 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் கோவை மாநகர போலீசாரும் இணைந்து அரசின் நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200, சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு ரூபாய் 500, என அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் கோவை மாநகராட்சி வடக்கு மண்டலங்களில் ஆயிரத்து 700 பேரும் கிழக்கு மண்டலத்தில் 6,300 பேர், மேற்கு மண்டலத்தில் 3,400 பேர். எனவே மொத்தத்தில் 11 ஆயிரத்து 400 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதுவரை கோவை மாநகராட்சி பகுதியில் அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்ற அவர்களிடமிருந்து ரூபாய் 99 லட்சத்து 16 ஆயிரத்து 355 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கோவை மாநகரில் உள்ள முக்கிய சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் முக கவசம் அணியாமல் சென்ற அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
மாநகர் முழுவதும் காய்ச்சல் பரிசோதனை அதிகரிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். சளி காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
அதேபோல, பொது மக்கள் முக கவசம் அணிந்து வெளியே செல்கிறீர்களா? சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா? என கண்காணிக்க கோவை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் 40 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் கோவை மாநகர போலீசாரும் இணைந்து அரசின் நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200, சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு ரூபாய் 500, என அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் கோவை மாநகராட்சி வடக்கு மண்டலங்களில் ஆயிரத்து 700 பேரும் கிழக்கு மண்டலத்தில் 6,300 பேர், மேற்கு மண்டலத்தில் 3,400 பேர். எனவே மொத்தத்தில் 11 ஆயிரத்து 400 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதுவரை கோவை மாநகராட்சி பகுதியில் அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்ற அவர்களிடமிருந்து ரூபாய் 99 லட்சத்து 16 ஆயிரத்து 355 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கோவை மாநகரில் உள்ள முக்கிய சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் முக கவசம் அணியாமல் சென்ற அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.