திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளான மலையாண்டி கவுண்டனூர், ஆண்டிய கவுண்டனூர், உரல்பட்டி, கண்ணமநாயக்கனூர் மருள் பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தக்காளி சாகுபடி என்பது பிரதான பயிராக இருந்து வருகிறது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளான மலையாண்டி கவுண்டனூர், ஆண்டிய கவுண்டனூர், உரல்பட்டி, கண்ணமநாயக்கனூர் மருள் பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தக்காளி சாகுபடி என்பது பிரதான பயிராக இருந்து வருகிறது.
ஆண்டுதோறும் தக்காளி சீசனில் வரத்து அதிகரித்து அதன் விலை வீழ்ச்சி அடைவது வாடிக்கையாகிவிட்டது. இந்த ஆண்டும் பதினாறு கிலோ எடைகொண்ட தக்காளி பெட்டி ரூபாய் 50க்கு மட்டுமே விற்பனையாகி வருகிறது. ஆள் கூலி கூட இந்த தொகை கட்டாத காரணத்தால் பல விவசாயிகள் தக்காளி அறுவடை செய்யாமல் அப்படியே தோட்டத்தில் விட்டுவிட்டனர்.
அதேபோல, ஒருசிலர் அறுவடை செய்து கமிஷன் மண்டிகள் கொடுத்தாலும் அதுவும் விற்பனையாகாமல் ஓரிரு நாட்களில் கெட்டுவிடுகிறது.

அந்த கெட்டுப் போன தக்காளிகளை சாலை ஓரங்களில் மழைபோல் கொட்டி விடுகின்றனர். இதை பார்க்கும்போது விவசாயிகள் கண்களில் கண்ணீர் வழிகிறது.

எனவே, தக்காளி பாதுகாக்க குளிர்சாதன வசதி கொண்ட கிடங்குகளும் தக்காளி சாஸ் உள்ளிட்ட மதிப்புக்கூட்டு பொருளாக தக்காளியை மாற்றி அதற்கொரு ஆதார விலை நிர்ணயம் செய்ய அரசு முன்வர வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டுதோறும் தக்காளி சீசனில் வரத்து அதிகரித்து அதன் விலை வீழ்ச்சி அடைவது வாடிக்கையாகிவிட்டது. இந்த ஆண்டும் பதினாறு கிலோ எடைகொண்ட தக்காளி பெட்டி ரூபாய் 50க்கு மட்டுமே விற்பனையாகி வருகிறது. ஆள் கூலி கூட இந்த தொகை கட்டாத காரணத்தால் பல விவசாயிகள் தக்காளி அறுவடை செய்யாமல் அப்படியே தோட்டத்தில் விட்டுவிட்டனர்.
அதேபோல, ஒருசிலர் அறுவடை செய்து கமிஷன் மண்டிகள் கொடுத்தாலும் அதுவும் விற்பனையாகாமல் ஓரிரு நாட்களில் கெட்டுவிடுகிறது.
அந்த கெட்டுப் போன தக்காளிகளை சாலை ஓரங்களில் மழைபோல் கொட்டி விடுகின்றனர். இதை பார்க்கும்போது விவசாயிகள் கண்களில் கண்ணீர் வழிகிறது.
எனவே, தக்காளி பாதுகாக்க குளிர்சாதன வசதி கொண்ட கிடங்குகளும் தக்காளி சாஸ் உள்ளிட்ட மதிப்புக்கூட்டு பொருளாக தக்காளியை மாற்றி அதற்கொரு ஆதார விலை நிர்ணயம் செய்ய அரசு முன்வர வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.