கோவை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நேரங்களில் ரயில் மற்றும் விமான பயணிகள் தவிர மருத்துவ அவசர தேவைக்கு செல்பவர்கள் தடையின்றி செல்லலாம் என மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நேரங்களில் ரயில் மற்றும் விமான பயணிகள் தவிர மருத்துவ அவசர தேவைக்கு செல்பவர்கள் தடையின்றி செல்லலாம் என மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாநகர காவல் ஆணையர் கூறியதாவது,
கோவை மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு 10:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சோதனைச் சாவடிகள் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு தடைவிதிக்கப்படுகிறது. தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
அது சமயம் ரயில் விமான பயணிகள் மற்றும் மருத்துவ அவசர தேவைக்கு செல்பவர்களுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும். சோதனையின்போது போலீசாரிடம் பயண டிக்கெட் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து மாநகர காவல் ஆணையர் கூறியதாவது,
கோவை மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு 10:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சோதனைச் சாவடிகள் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு தடைவிதிக்கப்படுகிறது. தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
அது சமயம் ரயில் விமான பயணிகள் மற்றும் மருத்துவ அவசர தேவைக்கு செல்பவர்களுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும். சோதனையின்போது போலீசாரிடம் பயண டிக்கெட் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.