அன்னூரில் ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக தனியார் நிறுவனம் மீது விவசாயிகள் புகார்!

கோவை: அன்னூரில் உள்ள ஜெயபாரதி அக்ரோ புட்ஸ் நிறுவனம் ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.



கோவை: அன்னூரில் உள்ள ஜெயபாரதி அக்ரோ புட்ஸ் நிறுவனம் ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.



இது குறித்து கோவை மாவட்டம் அன்னூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது;



“அன்னூரை சுற்றியுள்ள சிறிய கிராமங்களில் விவசாயிகளிடம் இருந்து விளை பொருட்களை கொள்முதல் செய்ய ஜெயபாரதி அக்ரோ புட்ஸ் நிறுவனம் முன்வந்தது. விளைபொருட்களுக்கான தொகையில் 20 சதவிகிதத்தை உடனடியாகவும், மீதத் தொகை காசோலை மூலமாகவும் தருவதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தரராசு உறுதி அளித்தார்.

அதன்படி அவர் கொடுத்த காசோலைகளுக்கு பணம் செலுத்தவில்லை என்று வங்கிகளில் இருந்து விவசாயிகளுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து ஜெயபாரதி அக்ரோ புட்ஸ் நிறுவனத்தின் விவசாயிகள் கேட்டனர்.



ஆனால், முறையான பதில் எதுவும் தரப்படவில்லை. 6 மாத காலமாக விவசாயிகளுக்கு ரூ.40 லட்சத்துக்கும் அதிகமாக நிலுவைத் தொகையை தராமல் சுந்தரராசு ஏமாற்றி வருகிறார். இதற்கு முன்னர் சுந்தரராசு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வழக்கு இதுவரை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்படாமல் இருக்கிறது. ஜெயபாரதி அக்ரோ புட்ஸ் நிறுவனத்தை நம்பி ஏமாற்றமடைந்த விவசாயிகள் கடன் நெருக்கடியில், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

எனவே ஜெயபாரதி அக்ரோபுட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தரராசு மீது விரைந்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.” இவ்வாறு விவசாயிகள் புகாரில் தெரிவித்துள்ளனர்

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...