கோயில்களில் பக்தர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை!

கோவை: கோயில்களுக்கு வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.


கோவை: கோயில்களுக்கு வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறையின் கோவை மண்டல இணை ஆணையர் அலுவலகம் சார்பில், அனைத்து கோயில்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,

“கோயில்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள், அதிகாரிகள் என்று அனைவரும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விதிகளை மீறும் பணியாளர்கள், அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

கோயில்களுக்கு வரும் பக்தர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்தவர்களை மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும்.

போதுமான முகக்கவசங்கள், கிருமி நாசினிகளைகையிருப்பில் வைத்திருக்க வேண்டும். கோயிலில் பக்தர்கள் கும்பலாக நிற்கவோ, அமரவோ அனுமதிக்க கூடாது.

கோயில் வளாகத்தில் திருமண வைபவங்கள், உப்பு மஞ்சள் மாற்றுதல் போன்ற நிகழ்வுகளை விதிமுறைப்படி நடத்த வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் விதிமுறைகளை மீற கூடாது. விதிகளை மீறும் பக்தர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்,” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...