கோவை: கோவையில் அதிகாலை 3 மணி அளவில் ரயில் முன்பு பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் அதிகாலை 3 மணி அளவில் ரயில் முன்பு பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில், “ஐலண்ட் எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 3 மணி அளவில் கோவையை நோக்கி வந்துகொண்டிருந்தது. அது இருகூர் அருகே வந்து கொண்டிருந்த போது காதலர்கள் இருவரும் ரயில் முன் பாய்ந்தனர்.
ரயில் அதிவேகமாக வந்ததால் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களின் உடல்கள் துண்டு துண்டாக தூக்கி வீசப்பட்டு பட்டது. சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதிகாலையில் அந்த பகுதியில் நடைபயிற்சி சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ரயில்வே போலீசாருக்கு தெரிவித்தனர்,” என்று கூறினர்.
உடனடியாக ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் இருவரும் காதலர்கள் என்பது தெரியவந்துள்ளது. எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக கோவை வந்தார்கள்? ஊர் பெயர் விவரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில், “ஐலண்ட் எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 3 மணி அளவில் கோவையை நோக்கி வந்துகொண்டிருந்தது. அது இருகூர் அருகே வந்து கொண்டிருந்த போது காதலர்கள் இருவரும் ரயில் முன் பாய்ந்தனர்.
ரயில் அதிவேகமாக வந்ததால் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களின் உடல்கள் துண்டு துண்டாக தூக்கி வீசப்பட்டு பட்டது. சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதிகாலையில் அந்த பகுதியில் நடைபயிற்சி சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ரயில்வே போலீசாருக்கு தெரிவித்தனர்,” என்று கூறினர்.
உடனடியாக ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் இருவரும் காதலர்கள் என்பது தெரியவந்துள்ளது. எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக கோவை வந்தார்கள்? ஊர் பெயர் விவரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.