கோவையில் குடிபோதையில் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
கோவை: கோவையில் குடிபோதையில் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
கோவை காந்திபுரம் ஒன்பதாவது வீதியில் புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருக்கும் தொழிலாளர்கள் கட்டடம் கட்டும் இடத்திலேயே தங்கி வேலை செய்து வருகின்றனர்.
விருதுநகரைச் சேர்ந்த மொய்தீன் (37), திருச்சியைச் சேர்ந்த துரை (60) ஆகிய இரண்டு கட்டடத் தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர் கொடுத்த அறையில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
அறையில் இருந்த போது நேற்று இரவு இருவருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதன் பின்னர் இருவரும் மது குடித்து விட்டு வந்தனர்.
நள்ளிரவில் மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்தது. மிதமிஞ்சிய மதுபோதையில் இருந்த, துரை ஆத்திரமடைந்து மொய்தீனை அங்கிருந்த கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு ஓடிவிட்டார்.
மொய்தீனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் தலைமறைவான துரையை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று இரவு கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை காந்திபுரம் ஒன்பதாவது வீதியில் புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருக்கும் தொழிலாளர்கள் கட்டடம் கட்டும் இடத்திலேயே தங்கி வேலை செய்து வருகின்றனர்.
விருதுநகரைச் சேர்ந்த மொய்தீன் (37), திருச்சியைச் சேர்ந்த துரை (60) ஆகிய இரண்டு கட்டடத் தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர் கொடுத்த அறையில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
அறையில் இருந்த போது நேற்று இரவு இருவருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதன் பின்னர் இருவரும் மது குடித்து விட்டு வந்தனர்.
நள்ளிரவில் மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்தது. மிதமிஞ்சிய மதுபோதையில் இருந்த, துரை ஆத்திரமடைந்து மொய்தீனை அங்கிருந்த கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு ஓடிவிட்டார்.
மொய்தீனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் தலைமறைவான துரையை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று இரவு கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.