திருமணம் உள்ளிட்ட பொது பொது நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்க கோரி விழாக்களுக்கு பொருட்களை வாடகைக்குத் தரும் நிறுவனங்களின் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேளதாளங்களுடன் வந்து மனு அளித்தனர்
திருப்பூர்: திருமணம் உள்ளிட்ட பொது பொது நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்க கோரி விழாக்களுக்கு பொருட்களை வாடகைக்குத் தரும் நிறுவனங்களின் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேளதாளங்களுடன் வந்து மனு அளித்தனர்
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவி வரக் கூடிய சூழ்நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் சார்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேளதாளங்கள் ஊர்வலமாக வந்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், “கடந்த வருடம் அமல்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பு ஊரடங்கின் காரணமாக திருமணம் உள்ளிட்ட பொது விசேஷங்கள் எளிமையான முறையில் நடத்தப்பட்டன. இதனால், எங்கள் அமைப்பின் கீழ் உள்ள வாடகை பாத்திரக்கடை, ஒலி ஒளி அமைப்பாளர்கள், மேடை அலங்கார அமைப்புகள் செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது மீண்டும் கட்டுப்பாடுகள் விதித்து இருப்பதன் காரணமாக எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே, திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் நடத்த கூடுதல் தளர்வுகள் வழங்க வேண்டும்,” எனக் கூறப்பட்டுள்ளது.